Tuesday, January 21, 2020

ஆசார்ய ஹ்ருதயம்.

ஆசார்ய ஹ்ருதயம்.
விவேக பலம் வீடு - பற்று :
ஸப்த படி :
அசித் - அயன சம்பந்தம்
அவித்யா - ஸௌஹார்தம்
அந்தம் - அனந்தம்
கர்மம் - கிருபை
ஜன்மம் - ஜாயமான கடாட்சம்
அசத்வம் (ரஜஸ்+தமஸ்) - சத்வம்
அஜ்ஞானம் - அர்த்தபஞ்சக ஞானம்
துக்கம் - நிரதிசய ஆனந்தம்
ஸம்சாரம் - மோட்சம்.

சாஸ்திரத்தின் பெருமை :
விசிஷ்ட வேஷம் - நிஸ்கிருஷ்ட வேஷம்
சரீர சம்பந்தம் - ஸுத்தாத்ம தத்வம்
சாஸ்திரம் - சாஸ்திர சாரம்
முனிவரை இடுக்கி - முன்னீர் வண்ணனாய்
வேதம் - திருமந்திரம்
அதிகாரி நியமம் - ஸர்வாதிகாரம்
சேஷத்வ+போக்த்ருத்வம் - பாரதந்திரிய+போக்யதை
இஷ்ட வினியோகார்ஹம் சேஷத்வம் - இஷ்ட வினியுஜ்யமானத்வம் பாரதந்திரியம்
ஸ்வ-ஸ்வரூபப்படி - பகவத் திருவுள்ளப்படி
நம்முடைய கைங்கார்ய அனுபவம் பிரதானம் - பகவத் கடாட்ச வீட்சிண்யம் பிரதானம்
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸவபதஸ்சத என்கிற நம் நினைவு - உன் மனத்தால் என்நினைந்திருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே என்கிற அவன் நினைவு .
கோத்ர+சரண+சூத்ர கூடஸ்தர் - பராங்குச+பரகால+யதிவரர்
சமஸ்கிருதம் - ஆகத்யம் (தமிழ்)
பர வியூக விபவ அந்தர்யாமி அர்ச்சை - வேதம் பாஞ்சராத்ரம் மனு ஸ்மருதி இதிஹாசம் திவ்யபிரபந்தம்
வேத வேத்யன் நியாயப்படி
ரிக் யஜு சாம அதர்வம் - திருவிருத்தம் திருவாசிரியம் திருவாய்மொழி பெரிய திருவந்தாதி
தர்மவீர்ய ஞானத்தால் பாடினார்கள் - மதிநலம் அருளப்பெற்ற பக்தியினால் பாடினார்
பர வியூக விபவ அந்தர்யாமி விஷயம் - அர்சாவதாரம் விஷயம்
உப்புக்கடல் - மேகம் பருகின சமுத்ராம்பு போலே இவர் வாயனவாறே ஸர்வதா ஸர்வோபஜீவிதம்.

ஆழ்வார் பெருமை :
ஆழ்வார் சாரஜ்ஞர்
திருவாய்மொழி+மற்ற பிரபந்தங்களுக்கு சாஸ்த்ர சாரமான ரஹஸய திரயமும், அர்தபஞ்சகமும் விஷயம்.
வீட்டின்பம் இன்பமாரி இன்பபாவில்
(பிரமேயம் பிரமாதா பிரமாணம்)
திரவ்ய வர்ண பாஷா
நிரூபணம் (ஆராய்சி) மாத்ருயோநி பரீட்சையோடு ஒக்கும்.
ஞானமாகிற தாமரை மலர - அச்சுத பாநு x யானே எந்தனதே என்றிருந்தேன்
சம்ஸாரமாகிற கடல் வற்ற- ராம திவாகர x வேறாகவே விளையும் வீடு
அஜ்ஞானமாகிற இருள் விலக - ஆதித்ய x திருவாய்மொழி
ஆகிய இம்மூன்றும் வகுளபூஷண பாஸ்கரோதயத்திலே.
இவர் ஆவிர்பாகம் குவசித் குவசித் என்று பாகவதத்தில் ஸுகர் சூசிப்பித்தது.

ஞானத்தில் தன்பேச்சு, பிரேமத்தில் பெண்பேச்சு.
தானாக - 73
தாய் - 7
தோழி - 3
மகள் - 17
தூது - பறவை - ஆசாரியன் - ஞானம், அநுட்டாணம் சிறகு
மடல்
அநுகாரம்
நவதிருப்பதி 9 + மலையாள தேசம் 12 + இதர திவ்யதேசம் 17 = 38
ஶ்ரீரங்கம் - வியூக ஸௌஹார்தம்
திருவேங்கடம் - வாத்ஸல்யம்
ஆழ்வார் திருநகரி - பரேசத்வம்
குடந்தை - மாதுர்யம்
குறுங்குடி - லாவண்யம்
வானமாமலை - ஔதார்யம்

திருவாய்மொழியின் சீர்மை :
கீதையும் - திருவாய் மொழியும்
தத்வ வசனம் - தத்வ தரிசி வசனம்
100றுவரை மாய்க்க - 25 விஷய வாசனா பிரக்ருதி+ஆத்ம மயக்கை ஒழிக்க
கொல்ல - உத்தரிக்க
சந்தோஷம் -> துக்கம் - துக்கம் -> சந்தோஷம்
நம்பி சரண் என்று தொடங்கி ஏபாவம் என்று முடிந்தது கீதை - ஏபாவம் பரமே! என்று தொடங்கி உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் என ஆழ்வார் முடித்தார்.

திருவாய்மொழியில் ஸ்வாபதேசம் :
பரத்வம் - ஞப்தி
காரணத்வம் - முக்தி
வியாபகத்வம் - விருத்தி
நியந்த்ருத்வம் - விரக்தி
காருணிகத்வம் - பக்தி
சரண்யத்வம் - பிரபத்தி
சக்தத்வம் - சக்தி
சத்யகாமத்வம் - ஆர்த்தி
ஆபத்சகத்வம் - பூர்த்தி
ஆர்த்திஹரத்வம் - முக்தி பிரதத்வம்
இவை 10 பத்துக்கும் விஷயம்

இனி இனி என்று 20ன் கால் கூப்பிட்டும் உறாமை
பிரபந்தம் தலைக்கட்ட ( எடுத்த எடுப்பிலே ஆயிரத்துள் இப்பத்து என்று இவர்வாயில் நின்று பேச வைத்து, அத்தை தலைக்கட்டவேண்டி)
நாடுதிருந்த (பாசுரங்கள் பாடியது மட்டுமல்லாது, நாதனுக்கு 4000 உரைத்தது, பவிஷயத் ஆசார்யரை பிரசாதித்தது)
நச்சுப்பொய்கை ஆகாமைக்கு (பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் இன்னின்ற நீர்மை இனியாமுறாமை என்ற போதே மோட்சம் கொடுத்திருந்தால், இவர் பாசுரங்களை காளியன் மடுக்கரை தீர்த்த பிராசனம் போலே வாய் வைப்பார் இல்லாது, அதனால் உலகம் நச்சுப் பொய்கை ஆகாமைக்கு)
அவருடைய ஆர்த்தியில் - பரபக்தி பரஜ்ஞான பரம்பக்தி தசை அளவாக - பூர்த்தியை வளைவித்து அழைத்துக்கொள்ள.

மயர்வற - வீடு பெற்ற என்பது பிரபந்த பூர்த்திக்குமான ஐக்கார்த்தம் அதாவது ஒன்றான தாத்பர்யமாகும். பிரபன்ன ஜன கூடஸ்தரான அந்த ஆழ்வார் சம்பந்தத்தால் நமக்குமாகக் கடவது வீடு பேறு என்பதே ஆசார்ய ஹ்ருதய கிரந்தத்தின் உட்கருத்து.

—Excerpts from Sri. U. Ve. Velukkudi Swami Sydney lectures.
Compiled by (Agaram) Kidambi Srinivasa Rangan Srinivasa Dasan.

No comments:

Post a Comment