திருப்பாவை சாரம் :
1. பேடிகா விபாகம்.
ஐந்தினோடு பத்துமொரு மூன்றும் பதியொன்றும்
தந்தநம் கோதை திருப்பாவை-- அந்தமோடு
ஒன்றுமாய முப்பதும் எப்போதும் செப்பவே
ஒன்றுமவள் பேறு நமக்கு.
1. நாராயணனே நமக்கே பறை :
பாவையர் நோன்பை அநுகரித்து நல்திருப்
பாவை பதிகம் பணித்தளாம்நம் -- கோதைதன்
கூற்று அடியார் அவர்கூடி மாலிரைஞ்சிப்
போற்ற பறையது பெற்று.
2. வையத்து :
தியானமும் அர்சனம்போல் நாமசங் கீர்தனம்
வாயும் கலியில் உலகத்து-- ஆய
அனைவர்க்கும் ஆற்ற அமைந்ததாம் வாழ்வு
முனைவார்க்கு உற்றதோர் ஆறு.
3. மும்மாரி :
1. பேடிகா விபாகம்.
ஐந்தினோடு பத்துமொரு மூன்றும் பதியொன்றும்
தந்தநம் கோதை திருப்பாவை-- அந்தமோடு
ஒன்றுமாய முப்பதும் எப்போதும் செப்பவே
ஒன்றுமவள் பேறு நமக்கு.
1. நாராயணனே நமக்கே பறை :
பாவையர் நோன்பை அநுகரித்து நல்திருப்
பாவை பதிகம் பணித்தளாம்நம் -- கோதைதன்
கூற்று அடியார் அவர்கூடி மாலிரைஞ்சிப்
போற்ற பறையது பெற்று.
2. வையத்து :
தியானமும் அர்சனம்போல் நாமசங் கீர்தனம்
வாயும் கலியில் உலகத்து-- ஆய
அனைவர்க்கும் ஆற்ற அமைந்ததாம் வாழ்வு
முனைவார்க்கு உற்றதோர் ஆறு.
3. மும்மாரி :
மூரிநீர் புக்கு முகந்துபெய் மாரியின்
பெரிய கருணை உளதோவென் -- தேறில்
பெரியமால் மாவலிப்பால் மாணியாய் கூசா
திரந்தளித்தான் வண்மையே மிக்கு.
4. ஊழி முதல்வன் :
பொன்னை மெழுகொற்றி தேற்றுமா போலேயாய்
தன்னைக் கொடுதரணி எல்லாமும் -- முன்னைபோல்
தான்தோற்று வித்தல் சமநோக்கே! ஊன்உயிர்
மேன்ஏற்றல் ஆம்தனி நோக்கு.
தன்னைக் கொடுதரணி எல்லாமும் -- முன்னைபோல்
தான்தோற்று வித்தல் சமநோக்கே! ஊன்உயிர்
மேன்ஏற்றல் ஆம்தனி நோக்கு.
5. தூயோமாய் வந்து தூய பெருநீர் தூமலர் தூய் :
தன்கைகால் மெய்வாயும் கொடுஅளைந்த காளிந்தி
போன்கரணம் மூன்றும் கொடுகண்ணன் -- தன்நினைவால்
எண்ணம் மொழிசெய்கை ஒன்றிச் செய்கிரியை
வண்ணம் அழகியபூ நாறு.
9. பாகவத ஸம்பந்தம் ஸ்வதந்திரோபாயம்:
போன்கரணம் மூன்றும் கொடுகண்ணன் -- தன்நினைவால்
எண்ணம் மொழிசெய்கை ஒன்றிச் செய்கிரியை
வண்ணம் அழகியபூ நாறு.
6. பிள்ளாய் :
கற்றதன்றி உற்ற தவன்னடியார்க் காள்எற்றோ ?
பெற்ற பரமன் நமைஉடைத்தாய் -- மற்றையார்
விற்கவும் பாற்றென போக்க இசைந்தது
ஏற்கை நமஎன்பார் சாற்று.
7. கலந்து பேசின பேச்சரவம் :
வதரிவான் வைகுந்தம் பார்த்தன்தேர் முன்னாய்
கதிரொளி மால்கண்ணன் கேசவனன் -- றோதிய
மெய்மைப் பெருவார்த்தை ஒவ்வொன்றும் மால்மாறன்
வாய்மொழிக் குள்ளாதல் கொள்ளு.
8. வந்து நின்றோம் :
காசை இழந்தவன் பொன்னை இழந்தவன்
ஆசை மணியை இழந்தவன் -- பேசநின்ற
மால்நிற்க பத்தர் பரவுவார், வீடணன்போல்
கோல்கொழுந்த தற்றே அவர்.
9. பாகவத ஸம்பந்தம் ஸ்வதந்திரோபாயம்:
இருகால் விலங்கு இறகுடை பட்சி
ஒருகால் திருமால் அடியார் -- அருள்நோக்
கிலக்கதேல் ஞான மநுட்டான மில்லா
நிலையரேனும் சேரும்மால் வீடு.
9. மாமான் மக்களே :உனக்கேநாம் ஆட்செய்வோம் என்று தொடங்கி
உனக்கும் உனதடிய ராவார் — தமக்குமாய்பின்
மாலே! உனதடியார் பாலேயாய் கோலுமது
ஏலுவதும் என்கொள் குறிப்பு?
10. ஆற்ற அனந்தல் :
ஆறும் அடைவும் அவன்தாள் எனவாகக்
கூறும் நினைவும் உறுதியும் -- பேறெனத்
தேறி அதன்வழி வாழுநற் சோம்பர்
உறவும் முறையும் விழைவு.
11. பொற்கொடி :
தனக்கும் பிறர்க்குமாய் அன்றி உறவு
எனக்குநீயே அன்றோ? எனவாய் — புனக்காயா
மேனிப் புனிதன் புணர்தியில் ஆம்உணர்த்திக்
கானகூட்டு மாலடியார் மாட்டு.
ஆறும் அடைவும் அவன்தாள் எனவாகக்
கூறும் நினைவும் உறுதியும் -- பேறெனத்
தேறி அதன்வழி வாழுநற் சோம்பர்
உறவும் முறையும் விழைவு.
11. பொற்கொடி :
தனக்கும் பிறர்க்குமாய் அன்றி உறவு
எனக்குநீயே அன்றோ? எனவாய் — புனக்காயா
மேனிப் புனிதன் புணர்தியில் ஆம்உணர்த்திக்
கானகூட்டு மாலடியார் மாட்டு.
12. மனத்துக்கினியானை அனைத்தில்லத்தாரும் அறிந்து :
பெண்ணுக்கும், பேதைக்கும் ஞானபக்தி யாளர்க்கும்
நண்ணித் தொழுவார்க்கும் நண்ணல் — விழையார்க்கும்
அண்ணல் இராமா நுசனை இராமனும்போல்
எண்ண இனிக்கும் உளம்.
நண்ணித் தொழுவார்க்கும் நண்ணல் — விழையார்க்கும்
அண்ணல் இராமா நுசனை இராமனும்போல்
எண்ண இனிக்கும் உளம்.
13. கீர்த்திமை பாடிப் போய் :
ஆறும் பயனுமாய் தேறாது பாடிப்போம்
பேறு அதுவேயாய் கந்தல் -- கழிந்தமை
கூறு மொருநாலும் மூன்றும் இரண்டும்வான்
ஏற பரமனைப்போய்ப் பாடு.
14. எங்கள்மேல் சாபம் இழிந்து :
15. நானேதான் ஆயிடுக :
அடியார்க் கிசைந்து அறியா திழைத்த
படிறு அதுவேனும் அன்றி -- கடிந்தமை
ஆற்றா தவரேனும் ஏற்றனமாய் தாழ்கையே
நோற்பார் சிறக்கும் இயல்பு.
பேறு அதுவேயாய் கந்தல் -- கழிந்தமை
கூறு மொருநாலும் மூன்றும் இரண்டும்வான்
ஏற பரமனைப்போய்ப் பாடு.
14. எங்கள்மேல் சாபம் இழிந்து :
செய்யாள் அவள்திரு மேனிதன் செவ்விமால்
மையோ டியகண் களில்மேவ -- செய்யகண்ணர்
என்னவரும் ஆவார் கருணையும் கண்டிப்பும்
ஒன்று பிறிததாம் நோக்கு.
15. நானேதான் ஆயிடுக :
அடியார்க் கிசைந்து அறியா திழைத்த
படிறு அதுவேனும் அன்றி -- கடிந்தமை
ஆற்றா தவரேனும் ஏற்றனமாய் தாழ்கையே
நோற்பார் சிறக்கும் இயல்பு.
16. நென்னலே வாய் நேர்ந்தான் :
கூடி இருந்ததாம் காலத்து கண்ணன்தான்
தேடி உரைத்தவையே கொண்டுயாம் -- நாடிவந்தோம்
நாயகநீ! கைபூட்டி ஆகாதென் ஓவாதே
நேய நிலைக்கதவம் நீக்கு.
17. அறம் :
அம்பரமே தண்ணீரே சோறே அறம்கண்ணன்
எம்பெருமான் தம்மின் இரக்கமும் -- அம்மனோய்!
செம்மைசேர் நற்தருமம் என்றாக செய்தவேள்வி
தன்மையார் நற்பேறும் அஃது.
18. நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் :
சுள்ளிக்கால் அன்ன அடியார் அவர்தலைவர்
உள்ளம் பெரியதன் போதமுடன் -- எள்ளிநமைத்
தள்ளாதே கொள்ளும் தகைமை கொழுகொம்பாய்
வள்ளிமேய பந்தல் படுத்து.
19. குத்து விளக்கு :
தன்னையும் காட்டிபுறச் சூழலும் காட்டுவதாம்
மின்னனய நல்விளகு போல்ஆசான் -- துன்னிருள்
நம்மில் துறத்துவனேல் அன்னை அவளுணர்த்த
தம்மின் வழிநடத்தும் மால்.
20. உன்மணாளனைத் தந்து :
மைத்துனன் உன்மணாளன் மாலோலன் மாலரையன்
மையகண்ணி நாதன் திருவுக்கும் — ஐய
திருவான செல்வன் மலராள் தனத்தன்
ஒருவன் அவன்தா எமக்கு!
21. ஏற்ற கலங்கள்:
ஏதிலார் எம்மனோர் ஆதரித்து ஆசரியன்
ஈத்தானாய் அல்பா வதிஆயுள் -- போதில்
பொழுதறிந்து போற்றி அலகில் தருமம்
விழைந்துகேட்ப்பார் ஏற்ற கலம்.
22. செங்கண் :
கழிவிரக்கம் காட்டி கழித்தன போக்கி
அழல விழித்து அகல்விப்பான் -- பாழே
பலபல செய்து புகல்அயல் இல்லா
புலையனேர்க்கு அங்கண் அருள்.
23. சீரிய சிங்காசனத்து இருந்து :
நடுவிலாச்சிக் கீத்த படுக்கை அறைவார்த்தை
காடேற வாயித்தால் கண்ணா! -- அடிசியோம்
காண நடந்துஅரி ஆசனத்தே வீற்றிருந்து
வேணுமவை ஆய்ந்து அருள்.
24. இன்று யாம் வந்தோம் :
அன்புடை ஆழ்வார்கள் போற்றி எனஏற்றி
நன்குடனே நாளும் வழுத்துலும் -- இன்னும்
பெரியாழ்வார் அஞ்சாமைக் காட்டியதுக் கஞ்சும்
பெருமைஆண் டாளுக்கும் உண்டு.
25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கருமவினை
கூற பிரிவினை இங்காகல் -- மாறமால்
தானும் பிறந்து இருமை வினைத்தீர்துப்
பேணும் கருணை பெரிது.
26. மாலே : ஆர்த்தி பூர்த்தி :
சரணமானால் வைகுந்தம் சேர்வழக்கு கொண்டு
மரணமானால் மேவப் பெறுவதூம் -- ஆரணமால்
ஊழ்வினை நம்போக்க மற்றபற்று அற்றராய்
சூழ்வினை அவனடியார் காத்து.
27. பாலேபோல் சீர் :
தேமதுர பாலேபோல் சீர்தன்னால் தன்பால்
நமவெனலார் தாம்தோற்ப தன்குணம் -- மாமே!
சமன்கொள்நல் வீடுசெய் மாலுக்கு தொண்டு
அமைந்தோமாய் கூடிக் களித்து .
28. கறவைகள் :
புறம்புண்டாம் வேத நெறிமேவல் விட்டு
புறம்புண்டாம் வேத நெறிமேவல் விட்டு
திறம்காட்டும் என்ஒருவன் தாள்கிட்டல் -- தேறுமென்
உரைத்த மொழிவழியே கைமுதல் வேட்டா
குறையில்லா கோவிந்தன் நாட்டு.
29. மற்றை நம் காமங்கள் மாற்று :
அடிமைக்கண் அன்புசெய் ஆர்வத் தறிவு
29. மற்றை நம் காமங்கள் மாற்று :
அடிமைக்கண் அன்புசெய் ஆர்வத் தறிவு
உடைமைக்கண் தேடும் மகிழ்ச்சித் -- தடையாம்
அடைந்து அனுபவிக்க புக்கால்நில் என்ன
மிடையாது நிற்றல் தலை.
30. இங்கிப் பரிசுரைப்பார் :
பால்கொடுக்கும் ஆவும்தோல் கன்றுக் கிரங்குமா
போல்கோதை வாய்பிறந்த இப்பாவை -- நூல்படிப்பார்
பால்ஆய மாலும் தயங்கா திரங்கும்என
வால்பெறலாம் எங்கும் திரு.
-- தாசாரதி தாஸன் ,
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாச தாஸன்.
30. இங்கிப் பரிசுரைப்பார் :
பால்கொடுக்கும் ஆவும்தோல் கன்றுக் கிரங்குமா
போல்கோதை வாய்பிறந்த இப்பாவை -- நூல்படிப்பார்
பால்ஆய மாலும் தயங்கா திரங்கும்என
வால்பெறலாம் எங்கும் திரு.
-- தாசாரதி தாஸன் ,
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாச தாஸன்.