Friday, January 24, 2020

திருப்பாவை சாரம் :

திருப்பாவை சாரம் :

1. பேடிகா விபாகம். 

ஐந்தினோடு பத்துமொரு மூன்றும் பதியொன்றும்
தந்தநம் கோதை திருப்பாவை-- அந்தமோடு
ஒன்றுமாய முப்பதும் எப்போதும் செப்பவே
ஒன்றுமவள் பேறு நமக்கு.

1. நாராயணனே நமக்கே பறை :
பாவையர் நோன்பை அநுகரித்து நல்திருப்
பாவை பதிகம் பணித்தளாம்நம் -- கோதைதன் 
கூற்று அடியார் அவர்கூடி மாலிரைஞ்சிப் 
போற்ற பறையது பெற்று.



2. வையத்து :
தியானமும் அர்சனம்போல் நாமசங் கீர்தனம்
வாயும் கலியில் உலகத்து-- ஆய
அனைவர்க்கும் ஆற்ற அமைந்ததாம் வாழ்வு 
முனைவார்க்கு உற்றதோர் ஆறு. 


3. மும்மாரி :
மூரிநீர் புக்கு முகந்துபெய் மாரியின் 
பெரிய கருணை உளதோவென்  -- தேறில் 
பெரியமால் மாவலிப்பால் மாணியாய் கூசா  
திரந்தளித்தான் வண்மையே மிக்கு. 


4. ஊழி முதல்வன் :
பொன்னை மெழுகொற்றி தேற்றுமா போலேயாய்
தன்னைக் கொடுதரணி எல்லாமும் -- முன்னைபோல்
தான்தோற்று வித்தல் சமநோக்கே! ஊன்உயிர்
மேன்ஏற்றல் ஆம்தனி நோக்கு.


5. தூயோமாய் வந்து தூய பெருநீர் தூமலர் தூய் :

தன்கைகால் மெய்வாயும் கொடுஅளைந்த காளிந்தி
போன்கரணம் மூன்றும் கொடுகண்ணன் -- தன்நினைவால்
எண்ணம் மொழிசெய்கை ஒன்றிச் செய்கிரியை
வண்ணம் அழகியபூ நாறு.


6. பிள்ளாய் :
கற்றதன்றி உற்ற தவன்னடியார்க் காள்எற்றோ ?
பெற்ற பரமன் நமைஉடைத்தாய் -- மற்றையார்
விற்கவும் பாற்றென போக்க இசைந்தது

ஏற்கை நமஎன்பார் சாற்று.

7. கலந்து பேசின பேச்சரவம் :
வதரிவான் வைகுந்தம் பார்த்தன்தேர் முன்னாய்
கதிரொளி மால்கண்ணன் கேசவனன் -- றோதிய
மெய்மைப் பெருவார்த்தை ஒவ்வொன்றும் மால்மாறன்
வாய்மொழிக் குள்ளாதல் கொள்ளு.

8. வந்து நின்றோம் :
காசை இழந்தவன் பொன்னை இழந்தவன்
ஆசை மணியை இழந்தவன் -- பேசநின்ற
மால்நிற்க பத்தர் பரவுவார், வீடணன்போல்
கோல்கொழுந்த தற்றே அவர்.

9. 
பாகவத ஸம்பந்தம் ஸ்வதந்திரோபாயம்:
இருகால் விலங்கு இறகுடை பட்சி
ஒருகால் திருமால் அடியார் -- அருள்நோக்
கிலக்கதேல் ஞான மநுட்டான மில்லா
நிலையரேனும் சேரும்மால் வீடு.

9. மாமான் மக்களே :உனக்கேநாம் ஆட்செய்வோம் என்று தொடங்கி
உனக்கும் உனதடிய ராவார் — தமக்குமாய்பின்
மாலே! உனதடியார் பாலேயாய் கோலுமது
ஏலுவதும் என்கொள் குறிப்பு?

10. ஆற்ற அனந்தல் :
ஆறும் அடைவும் அவன்தாள் எனவாகக்
கூறும் நினைவும் உறுதியும் -- பேறெனத்
தேறி அதன்வழி வாழுநற் சோம்பர்
உறவும் முறையும் விழைவு.

11. பொற்கொடி :

தனக்கும் பிறர்க்குமாய் அன்றி உறவு
எனக்குநீயே அன்றோ? எனவாய் — புனக்காயா
மேனிப் புனிதன் புணர்தியில் ஆம்உணர்த்திக்
கானகூட்டு மாலடியார் மாட்டு.


12. மனத்துக்கினியானை அனைத்தில்லத்தாரும் அறிந்து :
பெண்ணுக்கும், பேதைக்கும் ஞானபக்தி யாளர்க்கும்
நண்ணித் தொழுவார்க்கும் நண்ணல் — விழையார்க்கும்
அண்ணல் இராமா நுசனை இராமனும்போல்
எண்ண இனிக்கும் உளம்.

13. கீர்த்திமை பாடிப் போய் :
ஆறும் பயனுமாய் தேறாது பாடிப்போம்
பேறு அதுவேயாய் கந்தல் -- கழிந்தமை
கூறு மொருநாலும் மூன்றும் இரண்டும்வான்
ஏற பரமனைப்போய்ப் பாடு.

14. எங்கள்மேல் சாபம் இழிந்து :
செய்யாள் அவள்திரு மேனிதன் செவ்விமால்
மையோ டியகண் களில்மேவ -- செய்யகண்ணர்
என்னவரும் ஆவார் கருணையும் கண்டிப்பும்
ஒன்று பிறிததாம் நோக்கு.

15. நானேதான் ஆயிடுக :
அடியார்க் கிசைந்து அறியா திழைத்த 
படிறு அதுவேனும் அன்றி -- கடிந்தமை 
ஆற்றா தவரேனும் ஏற்றனமாய் தாழ்கையே 
நோற்பார் சிறக்கும் இயல்பு. 


16. நென்னலே வாய் நேர்ந்தான் :
கூடி இருந்ததாம் காலத்து கண்ணன்தான் 
தேடி உரைத்தவையே கொண்டுயாம் -- நாடிவந்தோம் 
நாயகநீ! கைபூட்டி ஆகாதென் ஓவாதே 
நேய நிலைக்கதவம் நீக்கு. 


17. அறம் :
அம்பரமே தண்ணீரே சோறே அறம்கண்ணன்
எம்பெருமான் தம்மின் இரக்கமும் -- அம்மனோய்!
செம்மைசேர் நற்தருமம் என்றாக செய்தவேள்வி
தன்மையார் நற்பேறும் அஃது.

18. நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் :
சுள்ளிக்கால் அன்ன அடியார் அவர்தலைவர்
உள்ளம் பெரியதன் போதமுடன் -- எள்ளிநமைத்
தள்ளாதே கொள்ளும் தகைமை கொழுகொம்பாய்
வள்ளிமேய பந்தல் படுத்து.

19. குத்து விளக்கு :
தன்னையும் காட்டிபுறச் சூழலும் காட்டுவதாம்
மின்னனய நல்விளகு போல்ஆசான் -- துன்னிருள்
நம்மில் துறத்துவனேல் அன்னை அவளுணர்த்த
தம்மின் வழிநடத்தும் மால்.

20. உன்மணாளனைத் தந்து :
மைத்துனன் உன்மணாளன் மாலோலன் மாலரையன்
மையகண்ணி நாதன் திருவுக்கும் — ஐய
திருவான செல்வன் மலராள் தனத்தன்
ஒருவன் அவன்தா எமக்கு!

21. ஏற்ற கலங்கள்:
ஏதிலார் எம்மனோர் ஆதரித்து ஆசரியன்
ஈத்தானாய் அல்பா வதிஆயுள் -- போதில்
பொழுதறிந்து போற்றி அலகில் தருமம்
விழைந்துகேட்ப்பார் ஏற்ற கலம்.

22. செங்கண் :
கழிவிரக்கம் காட்டி கழித்தன போக்கி
அழல விழித்து அகல்விப்பான் -- பாழே
பலபல செய்து புகல்அயல் இல்லா
புலையனேர்க்கு அங்கண் அருள்.


23. சீரிய சிங்காசனத்து இருந்து : நடுவிலாச்சிக் கீத்த படுக்கை அறைவார்த்தை
காடேற வாயித்தால் கண்ணா! -- அடிசியோம்
காண நடந்துஅரி ஆசனத்தே வீற்றிருந்து
வேணுமவை ஆய்ந்து அருள்.

24. இன்று யாம் வந்தோம் :
அன்புடை ஆழ்வார்கள் போற்றி எனஏற்றி
நன்குடனே நாளும் வழுத்துலும் -- இன்னும்
பெரியாழ்வார் அஞ்சாமைக் காட்டியதுக் கஞ்சும்
பெருமைஆண் டாளுக்கும் உண்டு.

25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கருமவினை
கூற பிரிவினை இங்காகல் -- மாறமால்
தானும் பிறந்து இருமை வினைத்தீர்துப்
பேணும் கருணை பெரிது.

26. மாலே : ஆர்த்தி பூர்த்தி :
சரணமானால் வைகுந்தம் சேர்வழக்கு கொண்டு
மரணமானால் மேவப் பெறுவதூம் -- ஆரணமால்
ஊழ்வினை நம்போக்க மற்றபற்று அற்றராய்
சூழ்வினை அவனடியார் காத்து.

27. பாலேபோல் சீர் :
தேமதுர பாலேபோல் சீர்தன்னால் தன்பால்
நமவெனலார் தாம்தோற்ப தன்குணம் -- மாமே!
சமன்கொள்நல் வீடுசெய் மாலுக்கு தொண்டு
அமைந்தோமாய் கூடிக் களித்து .

28. கறவைகள் :
புறம்புண்டாம் வேத நெறிமேவல் விட்டு
திறம்காட்டும் என்ஒருவன் தாள்கிட்டல் -- தேறுமென்
உரைத்த மொழிவழியே கைமுதல் வேட்டா
குறையில்லா கோவிந்தன் நாட்டு.

29. மற்றை நம் காமங்கள் மாற்று :

அடிமைக்கண் அன்புசெய் ஆர்வத் தறிவு
உடைமைக்கண் தேடும் மகிழ்ச்சித் -- தடையாம்
அடைந்து அனுபவிக்க புக்கால்நில் என்ன
மிடையாது நிற்றல் தலை.

30. இங்கிப் பரிசுரைப்பார் :
பால்கொடுக்கும் ஆவும்தோல் கன்றுக் கிரங்குமா
போல்கோதை வாய்பிறந்த இப்பாவை -- நூல்படிப்பார்
பால்ஆய மாலும் தயங்கா திரங்கும்என
வால்பெறலாம் எங்கும் திரு.

-- தாசாரதி தாஸன் ,
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாச தாஸன்.

Tuesday, January 21, 2020

ஆசார்ய ஹ்ருதயம்.

ஆசார்ய ஹ்ருதயம்.
விவேக பலம் வீடு - பற்று :
ஸப்த படி :
அசித் - அயன சம்பந்தம்
அவித்யா - ஸௌஹார்தம்
அந்தம் - அனந்தம்
கர்மம் - கிருபை
ஜன்மம் - ஜாயமான கடாட்சம்
அசத்வம் (ரஜஸ்+தமஸ்) - சத்வம்
அஜ்ஞானம் - அர்த்தபஞ்சக ஞானம்
துக்கம் - நிரதிசய ஆனந்தம்
ஸம்சாரம் - மோட்சம்.

சாஸ்திரத்தின் பெருமை :
விசிஷ்ட வேஷம் - நிஸ்கிருஷ்ட வேஷம்
சரீர சம்பந்தம் - ஸுத்தாத்ம தத்வம்
சாஸ்திரம் - சாஸ்திர சாரம்
முனிவரை இடுக்கி - முன்னீர் வண்ணனாய்
வேதம் - திருமந்திரம்
அதிகாரி நியமம் - ஸர்வாதிகாரம்
சேஷத்வ+போக்த்ருத்வம் - பாரதந்திரிய+போக்யதை
இஷ்ட வினியோகார்ஹம் சேஷத்வம் - இஷ்ட வினியுஜ்யமானத்வம் பாரதந்திரியம்
ஸ்வ-ஸ்வரூபப்படி - பகவத் திருவுள்ளப்படி
நம்முடைய கைங்கார்ய அனுபவம் பிரதானம் - பகவத் கடாட்ச வீட்சிண்யம் பிரதானம்
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸவபதஸ்சத என்கிற நம் நினைவு - உன் மனத்தால் என்நினைந்திருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே என்கிற அவன் நினைவு .
கோத்ர+சரண+சூத்ர கூடஸ்தர் - பராங்குச+பரகால+யதிவரர்
சமஸ்கிருதம் - ஆகத்யம் (தமிழ்)
பர வியூக விபவ அந்தர்யாமி அர்ச்சை - வேதம் பாஞ்சராத்ரம் மனு ஸ்மருதி இதிஹாசம் திவ்யபிரபந்தம்
வேத வேத்யன் நியாயப்படி
ரிக் யஜு சாம அதர்வம் - திருவிருத்தம் திருவாசிரியம் திருவாய்மொழி பெரிய திருவந்தாதி
தர்மவீர்ய ஞானத்தால் பாடினார்கள் - மதிநலம் அருளப்பெற்ற பக்தியினால் பாடினார்
பர வியூக விபவ அந்தர்யாமி விஷயம் - அர்சாவதாரம் விஷயம்
உப்புக்கடல் - மேகம் பருகின சமுத்ராம்பு போலே இவர் வாயனவாறே ஸர்வதா ஸர்வோபஜீவிதம்.

ஆழ்வார் பெருமை :
ஆழ்வார் சாரஜ்ஞர்
திருவாய்மொழி+மற்ற பிரபந்தங்களுக்கு சாஸ்த்ர சாரமான ரஹஸய திரயமும், அர்தபஞ்சகமும் விஷயம்.
வீட்டின்பம் இன்பமாரி இன்பபாவில்
(பிரமேயம் பிரமாதா பிரமாணம்)
திரவ்ய வர்ண பாஷா
நிரூபணம் (ஆராய்சி) மாத்ருயோநி பரீட்சையோடு ஒக்கும்.
ஞானமாகிற தாமரை மலர - அச்சுத பாநு x யானே எந்தனதே என்றிருந்தேன்
சம்ஸாரமாகிற கடல் வற்ற- ராம திவாகர x வேறாகவே விளையும் வீடு
அஜ்ஞானமாகிற இருள் விலக - ஆதித்ய x திருவாய்மொழி
ஆகிய இம்மூன்றும் வகுளபூஷண பாஸ்கரோதயத்திலே.
இவர் ஆவிர்பாகம் குவசித் குவசித் என்று பாகவதத்தில் ஸுகர் சூசிப்பித்தது.

ஞானத்தில் தன்பேச்சு, பிரேமத்தில் பெண்பேச்சு.
தானாக - 73
தாய் - 7
தோழி - 3
மகள் - 17
தூது - பறவை - ஆசாரியன் - ஞானம், அநுட்டாணம் சிறகு
மடல்
அநுகாரம்
நவதிருப்பதி 9 + மலையாள தேசம் 12 + இதர திவ்யதேசம் 17 = 38
ஶ்ரீரங்கம் - வியூக ஸௌஹார்தம்
திருவேங்கடம் - வாத்ஸல்யம்
ஆழ்வார் திருநகரி - பரேசத்வம்
குடந்தை - மாதுர்யம்
குறுங்குடி - லாவண்யம்
வானமாமலை - ஔதார்யம்

திருவாய்மொழியின் சீர்மை :
கீதையும் - திருவாய் மொழியும்
தத்வ வசனம் - தத்வ தரிசி வசனம்
100றுவரை மாய்க்க - 25 விஷய வாசனா பிரக்ருதி+ஆத்ம மயக்கை ஒழிக்க
கொல்ல - உத்தரிக்க
சந்தோஷம் -> துக்கம் - துக்கம் -> சந்தோஷம்
நம்பி சரண் என்று தொடங்கி ஏபாவம் என்று முடிந்தது கீதை - ஏபாவம் பரமே! என்று தொடங்கி உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் என ஆழ்வார் முடித்தார்.

திருவாய்மொழியில் ஸ்வாபதேசம் :
பரத்வம் - ஞப்தி
காரணத்வம் - முக்தி
வியாபகத்வம் - விருத்தி
நியந்த்ருத்வம் - விரக்தி
காருணிகத்வம் - பக்தி
சரண்யத்வம் - பிரபத்தி
சக்தத்வம் - சக்தி
சத்யகாமத்வம் - ஆர்த்தி
ஆபத்சகத்வம் - பூர்த்தி
ஆர்த்திஹரத்வம் - முக்தி பிரதத்வம்
இவை 10 பத்துக்கும் விஷயம்

இனி இனி என்று 20ன் கால் கூப்பிட்டும் உறாமை
பிரபந்தம் தலைக்கட்ட ( எடுத்த எடுப்பிலே ஆயிரத்துள் இப்பத்து என்று இவர்வாயில் நின்று பேச வைத்து, அத்தை தலைக்கட்டவேண்டி)
நாடுதிருந்த (பாசுரங்கள் பாடியது மட்டுமல்லாது, நாதனுக்கு 4000 உரைத்தது, பவிஷயத் ஆசார்யரை பிரசாதித்தது)
நச்சுப்பொய்கை ஆகாமைக்கு (பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் இன்னின்ற நீர்மை இனியாமுறாமை என்ற போதே மோட்சம் கொடுத்திருந்தால், இவர் பாசுரங்களை காளியன் மடுக்கரை தீர்த்த பிராசனம் போலே வாய் வைப்பார் இல்லாது, அதனால் உலகம் நச்சுப் பொய்கை ஆகாமைக்கு)
அவருடைய ஆர்த்தியில் - பரபக்தி பரஜ்ஞான பரம்பக்தி தசை அளவாக - பூர்த்தியை வளைவித்து அழைத்துக்கொள்ள.

மயர்வற - வீடு பெற்ற என்பது பிரபந்த பூர்த்திக்குமான ஐக்கார்த்தம் அதாவது ஒன்றான தாத்பர்யமாகும். பிரபன்ன ஜன கூடஸ்தரான அந்த ஆழ்வார் சம்பந்தத்தால் நமக்குமாகக் கடவது வீடு பேறு என்பதே ஆசார்ய ஹ்ருதய கிரந்தத்தின் உட்கருத்து.

—Excerpts from Sri. U. Ve. Velukkudi Swami Sydney lectures.
Compiled by (Agaram) Kidambi Srinivasa Rangan Srinivasa Dasan.

Friday, August 22, 2014

Sri U. Ve. Velukkudi Krishnan Swamy Upanyasangal

ஸ்ரீ  உ வே வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி உபன்யாசங்கள்  :

2008 – London

2008 – Washington DC

2008 – New Jersey

2008 – Houston

2008 – Phoenix

2008 – Los Angeles

2008 – San Francisco Bay Area

2008 – Seatle

2008 – Toronto

2008 – Boston

Acknowledgement:

All credits go to bhAgavathAs who have put in enormous effort to record and upload these upanyAsams at Vedics Event for the benefit of bhAgavathAs who couldn’t personally attend.

Thursday, August 21, 2014

Swamy Mudaliandan Vaibhavam - A Pictorial album by Dasarathy Trust.

Vande Mataram by Mahakavi SubbramaNaya Bharati.

https://www.youtube.com/watch?v=YcAZboFnJIA
​ *Original Tamil with English Translation* 
(Thanks to Sri K. Jayaraman of Chennai for the English translation) 

*நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும் * 
*குளிர் பூந்தென்றலும் கொழும்பொழிர்பசுமயும் * 
*வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை* 
*[வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ]* 

You are rich with perennial Sweet streams 
You are bright with plentiful luscious fruits 
You are cool with salubrious breeze 
You are reddish in hue, like a red garnet 
[I venerably bow before you] 

*தென்நிலவதனில் சிலிர்திடும் இரவும் * 
*தன்னியர் விரிமலர் சிலிர்திடும் இரவும் * 
*புன்னகை ஒளியும் தேன்மொழி பொலியும் * 
*வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை * 
*[வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ]* 

Your nights are lit with moonlight rays 
Your groves emit the fragrance of flowers 
The chirping voice of birds echo 
in sync with the mild smile of lovers 
O Giver of bliss, grant us boons 
[I venerably bow before you] 


*கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும் * 
*கோடி கோடி புயர்துணை கொற்றமார் * 
*நீடுபல்படை தாங்கி முன் நிற்கவும் * 
*கூடு திண்மை குறைந்தனை என்பதேன் ?* 
*ஆற்றலின் மிகுந்தனை அரும்பதம் பூட்டுவை * 
*மாற்றவர் கொணர்ந்த வண்பகை ஓட்டுவை * 
*[வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ]* 

Countless voices string your harp 
Countless shoulders wielding weapons sharp 
Stand alert to defend your virgin soil 
Who says you are timid and tremulous ? 
You are mighty, Hail your grace; 
Your foes in shame bite the dust 
[I venerably bow before you] 


*அறிவு நீ தருமம் நீ உள்ளம் நீ அதநினை * 
*மருமம் நீ , உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ * 
*தோளிடை வன்பு நீ, நெஞ்சகதன்பு நீ * 
*ஆலயம்தோறும் அணி பெற விளங்கும் * 
*தெய்வ சிலைஎல்லாம் தேவி இங்குனதே * 
*[வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ]* 

You are wisdom, you are the eternal law 
You are our heart, you are our soul and breath 
You are divine love, you are the awe in our hearts that conquer death 
You are the strength that moves our arm 
You are the beauty, yours is the charm that turns every image divine 
In our temples , you are the deity serene 
[I venerably bow before you] 

*பத்து படைகொள்ளும் பார்வதி தேவியும் * 
*கமலத்து இதழ்களிர் களித்திடும் கமலையும் * 
*அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ * 
*[வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ]* 

You are Parvathi armed with embattlements 
You are Lakshmi seated in ecstasy on lotus petals 
You are Saraswathi the bestower of pure wisdom 
[I venerably bow before you] 


*திரு நிறைந்தனை தன்னிகர் ஒன்றில்லை * 
*தீது தீர்ந்தனை நீர் வளம் சார்ந்தனை * 
*மருவு செய்களின் நற்பயன் மல்குவை * 
*வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை * 

*பெருகும் இன்பம் உடையை குறுநகை * 
*பெற்றொளிந்தனை பல்பணி பூண்டனை * 
*இரு நிலத்து வந்து எம்முயிர் தாங்குவை * 
*எங்கள் தாய் நின் பதங்கள் இறைஞ்சுவோம் * 

*[வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ]* 

You are wealth personified, you are non peril 
You are perfect, fertile with flowing streams 
Your gardens are rich with fruit bearing trees 
You reward virtues, your red hue reflects prosperity 

You the storehouse of all bliss 
Your scintillating smile adds to the splendor of your ornaments 
Condescend on us and sustain our lives 
We always adore the divine feet of our mother 
I venerably bow before you 
O my Mother, Mother India 
[I venerably bow before you] 

Thursday, July 17, 2014

''கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்''

ஸ்ரீ :
ஸ்ரீமதே ராமானுஜாய நாம:
ஸ்ரீமத் வரவர முனயே நாம:
ச்ரிய: பதியான ஸர்வேஸ்வரனுடைய நிர்ஹேதுக கிருபையால் ஞான பக்தி வைராக்யங்களைப் பெற்றவர்கள் ஆழ்வார்கள். அவ் வாழ்வார்கள் பதின்மர் என்பதும், அவர்கள் அவதார கிரமம் இன்னது என்பதும் ஸ்வாமி மணவாள மாமுனிகளால்  உபதேச ரத்தின மாலையில்
பொய்கையார், பூதத்தார், பேயார், புகழ்மழிசை 
அய்யன், அருள்மாறன், சேரலர்கோன், துய்யபட்ட 
நாதன், அன்பர்தாள்தூளி, நற்பாணன், நன்கலியன் 
ஈதிவர் தோற்றத்தடைவாம் இங்கு.
என்று அருளிச் செய்யப்பட்டது.. 
ஸம்ஸாரிகள் அனர்த்தத்தைக் கண்டு ஆற்றமாட்டாத பரம க்ருபாளுவான பகவான் தன்னைக் கிட்டி அவர்கள் கரைமரம் சேர பலக்ருஷிகளைசச் செய்து பார்த்து பயன்படாமல் போக, முடிவில் இங்குள்ள சில அதிகாரிகளையே ஆழ்வார்களாகத் திருத்தி  அவர்கள் மூலமாக லோகத்தாரையும்  திருத்த திருவுள்ளம் பற்றுகிறான். அப்படி அவனால் திருத்தப் பட்டு அவனுடைய சௌலப்ய, சௌசீல்ய, சௌந்தர்யாதி கல்யாண குணங்களில் ஆழங்கால் பட்டவர்களாய், பக்திப்ரவாஹம் உள்ளடங்காமல் பாசுரங்கள் திருவாய் மலர்ந்தருள, அவையே திவ்யப்ரபந்தங்கள் என வழங்கப் படுகின்றன.
இதையே  மாமுனிகள் 
''அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் 
இந்த உலகிருள் நீங்க வந்துதித்த''
என்று அருளிச் செய்தார்.
உப்பு ஜலமான கடல் நீரை மேகம் பருகி மழையாகப்  பொழியும் போது, அது பான யோக்யமாய் மாறுகிறதுபோல மிகவும் கடினமான பாஷையில் வேதாந்தங்களில் சொல்லப் பட்ட அர்த்தங்களை தங்கள் பாசுரங்களால் ஸர்வர்க்கும் ஸர்வதா உபஜீவ்ய மாக்கினவர்கள் ஆழ்வார்கள்.
இவ்வர்தத்தை அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் ஆசார்ய ஹ்ருதயத்தில்  ''மேகம் பருகின சமுத்திராம்பு போலே நூற்கடல் சொல் இவர் வாயனவாய் திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோப ஜீவ்யமாமே'' என்று காட்டியுள்ளார்.
 
தமிழ் பாஷையில் அவர்கள் அருளிச்செய்த பிரபந்தங்கள் வேதாந்தங்களில் மொழியப் பட்ட தத்வஹித புருஷாரத் தங்களை தழுவியே அவதரித்தன என்பதும் இத்தால் தேறுகிறது.
இப்படியான ஆழ்வார்களில், ஐந்தாவதாக அவதரித்தவர் நம்மாழ்வார். மற்றவர்களும் அழ்வார்களே ஆனாலும், நம்மாழ்வார் ஒருவரையே ''ஆழ்வார்'' என்கிற பதம் குறிக்கும். காரணம் இனி  மேலே விளக்கப் படுகின்றன.
''வேதவேத்யன்'' நியாயத்தாலே பிரமாணம், பிரமேயம் இரண்டுக்கும் ஐந்தைந்து நிலைகள் பேசப் படுகின்றன. பகவானுடைய பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை போலே, பிரமாண பூதமான வேதத்துக்கும் ஐந்து நிலைகள். அவைதாம் : வேதம், பாஞ்சராத்ரம், ஸ்மிருதிகள், இதிகாச புராணங்கள், திவ்யப் பிரபந்தங்கள் என்கிற ஐந்து நிலைகள் ஆகும். 
வேதத்துக்கு பரத்வத்திலும், பாஞ்சராத்ரதுக்கு வியூகத்திலும், ஹ்ருதி ஸநிவிஷ்டனான அந்தர்யாமித்வத்தில் ஸ்மிருதிகளுக்கும், விபவத்தில் இதிகாச புராணங்களுக்கும், அர்ச்சையில் நோக்கு திவ்ய பிரபந்தங்களுக்குமாம். ஆக, ஆழ்வார்களின் அருளிச் செயல்களுக்கு அர்ச்சாவதாரமே தாத்பர்யம் என்பது நம்பூவாசார்ய சன்மதம். 
ஆனால் நம்மாழ்வார் விஷயத்திலோ என்னில், அர்ச்சாவதார அனுபவத்திலும் விபவாவதாரமான கண்ணனிடத்திலேயே வியாமோகம். ''க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்'' என்ற பெயர் இத்தாலேயே இவருக்கு ஏற்பட்டது எனலாம். பராசர மகரிஷியும் இவரும் விபவத்தில் ஊன்றி இருப்பர்கள்  என்பது பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகம். 
அர்ச்சாவதார சௌலப்யத்தை உபதேசிக்க வந்த ஆழ்வார்  தன்னை விபவத்திலே மூட்டுவதை  ''செய்ய தாமரைக் கண்ணனாய்...'''(திருவாய்மொழி 3-6-1) பதிகத்திலே நிரூபித்தாராய்ப் பார்கிறோம். கிருஷ்ணவதாரத்தைக் காட்டிலும், அர்ச்சாவதாரத்துக்கு நீர்மை பிராசுர்யமான போதிலும் ''எத்திறம்'' என்று ஆறு மாதம் மோகித்தது கிருஷ்ணாவதாரத்திலே அன்றோ?
"கடியன், கொடியன், நெடியமால் உலகம் கொண்ட 
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும் 
கொடிய என்நெஞ்சு அவனென்றே கிடக்கும் எல்லே " (திருவாய்மொழி 5-3-5)
என்கிற பாசுரம் கொண்டும் இவ்வர்த்தம் ஊர்ஜிதப்படும்.  
கண்ணன் பரம துஷ்டனானாலும் அந்த தோஷமே உடலாய் என்நெஞ்சம் அவனே தஞ்சம் என்று கிடக்கிறது என்கிற ஆழ்வாருடைய கிருஷ்ண பக்தி ஸ்வரூப ப்ரயுக்தமே அன்றி, குணகிருத மன்று. 
சீதா பிராட்டி, அநஸூயை இடத்தில் அறிவித்தாப் போலே அவன் குணஹீனனான போதன்றோ அவனிடத்தி லுண்டான ஸ்வரூபக்ருத தாஸ்யத்தை நிரூபிக்கலாவது. 
மேலும் நாயிகா பாவத்தை அடைந்த ஆழ்வார், ஸ்பாவ சித்தமான வெண்மை நிறம் கொண்ட நாரையைக்  குறித்து, அந்நாரையும் கண்ணனை விட்டுப் பிரிந்த வருத்தத்தால் உடம்பு வெளுத்ததாக நினைத்துக் கதறுகிறார். இவருக்குண்டான விலக்ஷண பக்தியே இதற்கு காரணம். 
இந்த விஷயத்தையே அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும், ''அச்சேத்யோயம், அதாஹ்யோயம், அக்லேத்ய, அசோஷ்ய ஏவச''  என்னுமது ஈரும் , வேம், ஈரியாய் உலர்த்த எண்ணப் பட, காற்றும், கழியும் கட்டியழக் கொண்ட பெருங்காதலுக்கு பத்திமை நூல் வர்ம்பில்லையே''  என்றருளிச் செய்கிறார். 
 
இப்படியான  சாஸ்திர மர்யாதீத ஆழ்வாருடைய காதல் கண்ணனிடத்தில் பெருங்காதலாய், விலக்ஷண பக்தியாய், ''கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்'' என்றே  நிரூபிக்க ஹேதுவாகின்றன.